Saturday, March 23, 2013

போராடுவோம் !!!

உல்லாசம் தான்
வாழ்க்கை என்று நினைத்து நண்பருடன்,
இருபத்திமூன்று வயதில் பயணிக்கும்
ஒரு சாமானிய இளைஞன், பயணத்தின்
முடிவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
குரல் எழுப்ப,
அது அவனது வாழ்வை மாற்றி அமைக்கிறது.
அதன் பின்னர் போராட்டமே வாழ்வு என
மாற, உலகின்
வல்லரசுகளை எதிர்த்து நின்று முழங்குகிறான்.
முப்பத்தியொன்பது வயதில்
ஒரு போராட்டத்தில் அமெரிக்க
கூட்டு படையால்
கொலை செய்யப்படுகிறான். உலகம் இந்த
இளைங்கனை மறந்துவிடும்
என்று உலகின் வல்லரசுகள் நினைக்க,
உலகில் எந்த மூலையில் மக்கள்
புரட்சி வெடித்தாலும் அங்கெல்லாம்
இவனது முகமே சர்வாதிகாரத்திற்கும்,
வல்லரசுகளின் கொட்டதிற்க்கும்,
முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிரான
அடையாளமாக காட்டப்படுகிறது. அந்த
முகத்தின் பெயர் 'சே' என்று செல்லமாக
அழைக்கப்படும் எர்நெஸ்டொ 'சே'
குவேரா.

"எனது போராட்டத்தை யாரேனும்
தொடரும் நிலையில், நான்
வீழ்வதை பற்றி எனக்கு கவலையில்லை"
என்று முழங்கிய மாவீரனின்
வாக்குப்படி இன்றும் உலகில் ஏதேனும்
ஒரு மூலையில் மக்கள்
ஒடுக்குமுறைக்கு எதிராக
முழங்குகின்றனர். அக்டோபர் ஒன்பதாம்
திகதி உலகின் மாபெரும் போராளிகளில்
ஒருவரான சே குவேரா மறைந்த தினம்.

'அநீதிக்கு எதிராக உன் உள்ளம்
குமுறினால், நீயும் எனது சகப் போராளி'
என்றுரைத்த மக்களின்
போராளி சே குவேராவின்
சொல்படி ஒன்றிணைந்து போராடுவோம் !!!

வெற்றி அல்லது வீரமரணம்


நமது புரட்சிக்கான பயணம் எப்போதும் வெற்றியை நோக்கியே செல்ல வேண்டுமென நினைக்கிறோம். ஆனாலும் அடக்குமுறையால் ஒடுக்கப்படுமானால் வெற்றி கிடைக்காவிட்டாலும், மக்களின் உரிமைக்கான வெற்றிகளை நோக்கி செல்ல முடியாவிட்டாலும், எங்கள் முயற்சியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

'வெற்றி அல்லது வீரமரணம்' என்பது புரட்சி பாதையில் செல்லும் தோழர்கள் சிந்தனையில் அழுத்தமான கொள்கையால் பதிவு செய்த உயிர்ச் சொல். அவை உயிரோட்டத்துடன் எங்கள் சிந்தனைகளில் வாழ்கிறது!

- தோழர்
சே குவேரா